Saturday 4th of May 2024 07:25:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
நல்லூர் உற்சவத்தில் திருட்டில்  ஈடுபட்ட தம்பதியினர் கைது!

நல்லூர் உற்சவத்தில் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!


நல்லூர் உற்சவத்தின் தீர்த்த திருவிழாவான இன்று தங்கச் சங்கிலி திருட்டு ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி யாழ்ப்பாணம் பொலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது. உற்சவத்தில் நல்லூர் கந்தன் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடி கொண்டிருந்த போது அங்கிருந்த பக்தர்களிடம் தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பணாம் போலீசார் தெரிவித்தனர்.மேலும் குறித்த கணவன் மனைவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE